கேணல் கீதன் மாஸ்டர் இந்த இடத்தில் இந்த போராளியைப் பற்றி கூறியே ஆகவேண்டும். எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தனது குடும்பம் வெளிநாட்டில் வசித்தாலும் தமிழீழ விடுதலையை தன் உயிர் மூச்சாக நினைத்து பீசிங் எனப்படும் முட்டு வருத்தத்தின் மத்தியிலும் தலைவனையும் சக போராளிகளையும் உயிராக நேசித்த உன்னதமான போராளி கேணல் கீதன் தன் ஏலாத உடல் நிலையிலும் தலைவரின் எண்ணங்களுக்கு 100% செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று தானும் கால நேரம் பாராமல் செயல்பட்டு தன் சக போராளிகளையும் செயற்பட வைத்த அரிய செயல்பாட்டாளன். லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவு தொடங்கி லெப் கேணல் திலீபன் கல்லூரி வரை தலைவரின் எண்ணக்கருவுக்கு ஏற்ப உருவாக்கி திறம்பட செயலாற்றிய அரிய தளபதிகளில் ஒருவர் பல திறமையான போராளிகளை இனங்கண்டு தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்ற அற்புதமான தளபதி.பூனகரிபடையணி உருவாக்கத்தின் கதாநாயகன். மன்னார் களமுனை தொடக்கம் முள்ளிவாய்க்கால்களமுனை வரைபூனகரிப்படையணியின் அற்புதமான வரலாற்று சமர்களை கேணல் ஈழப்பிரியனோடு சேர்ந்து வழிநடத்தி சாதனைகள் செய்த அற்புத தளபதிக்கு வீரவணக்கம். இவருடன் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கம்

கேள்வி :சிறீலங்கா பௌத்த பேரினவாத அரசு, தமிழ் மாணவர்களுடைய கல்வியை திட்டமிட்டுச் சீரழித்து வந்திருக்கும் இந்த நிலையில் தமிழ் சிறார்கள் மீது அக்கறைப்படுவதாக காட்டிக்கொள்ளும் அதன் உளவியல் குறித்து பேச முடியுமா?
கேள்வி :சமர்க் களங்களை, கல்வி நிலையில் எவ்வாறு பதிவாக மேற்கொள்கிறீர்கள்?
கேள்வி :சமூக விடுதலைக்கான கல்வியும் கற்பிக்கப்படுகிறதா?

