வடமராட்சி புலம்பெயர் தமிழர் பிரித்தானியாவில் பலி!

364 0

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மேலுமொரு புலம்பெயர் தமிழர் உயரிழந்துள்ளார்.

வ.குணரட்ணம் (65) என்பவரே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை  (10.04.2020)  அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவர் வடமராட்சி இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தில் மேட்டன் பார்க், சவுத் விம்பிள்டன் பகுதியை வதிவிடமாகவும் கொண்டவர்.

கடந்த 12 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ச்சியாக சிகிற்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.