சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகளை மீள இயங்குவதற்கு அரசாங்கம் அறிவிப்பு!

272 0

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் பகுதிகளில் அல்லது ஆபத்தற்ற பகுதிகளிலும் ஏற்றுமதி வலயங்களிலும் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகளை மீள இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இவ்வாறான பகுதிகளில் தொழிற்சாலைகளை மீள இயக்குவதற்கான பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை மாவட்ட செயலங்களின் ஊடாகவே தெரியப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் செயற்படும் தொழிற்சாலைகளும் முதலீட்டு ஊக்குவிப்பு அதிகாரச சபையின் அனுமதியைப் பெற்று மீள இயங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.