மெனிங் சந்தை முழுமையாக மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு!

344 0

எதிர்வரும் 16ஆம் திகதி வரை மெனிங் சந்தை முழுமையாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மெனிங் சந்தை பொது வர்த்தகர் சங்கத்தின் உப தலைவர் நிமல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 105 லொறிகளில் மரக்கறிகள் மற்றும் பழங்கள் மெனிங் சந்தையை வந்தடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் பெரும்பாலானவற்றை குறைந்த விலையில் நுகர்வோருக்கு விநியோகித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.