உயிர்த்த ஞாயிறு இன்றாகும்

300 0

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், இன்று(12) உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த தினத்தை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இலங்கைவாழ் கிறிஸ்தவர்கள்  உயிர்ப்பு பெருவிழா வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கிறிஸ்தவ மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்தாண்டு உயிர்ப்பு பெருவிழா தினத்தன்று, நாட்டில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.