அரச அதிகாரிகளுக்கு விசேட காப்புறுதி

257 0

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகள், ஊழியர்களுக்காக விசேட காப்புறுதித் திட்டமொன்று தொடர்பாக, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம், விரு அபிமன் எனும் பெயரில் விசேட காப்புறுதித் திட்டமொன்று 15 இலட்சம் ரூபாய் காப்புறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது, கொவிட் – 19 நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்கள் கடமையின் போது உயிரிழக்கும்போது, உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு, 15 இலட்சம் ரூபாய் காப்புறுதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கொவிட்-19 சுகாதார சமூக நிதியத்துக்கு 50 இலட்சம் ரூபாய் பணத்தை அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.