அரச ஊழியர்களுக்கு இலவச காப்புறுதி

238 0
அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டத்தை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக விரு அபிமன் பெயரில் இந்த இலவச காப்புறுதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 15 இலட்ச ரூபா காப்புறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோய் (கொரோனா) தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்கள் கடமையின் போது உயிரிழக்கும் போது உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபா காப்புறுதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கொவிட்-19 சுகாதார சமூக நிதியத்திற்கு 50 லட்சம் ரூபா பணத்தை அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.