கொழும்பின் சில பகுதிகளில் இன்று அமுலாகின்றது 18 மணித்தியால நீர்வெட்டு!

357 0

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 01 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 9 ,14 மற்றும் நவகம்புர உள்ளிட்ட பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 13 மற்றும் 15-இற்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.