புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு: ரஷியா-சீனா எல்லை மூடப்பட்டது

283 0

ரஷியாவுக்கும், சீனாவுக்கும் இடையே விளாடிவோஸ்டோக் அருகே உள்ள எல்லை வழியாக சீனாவுக்கு வந்தவர்களில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த எல்லை மூடப்பட்டது.ரஷியாவுக்கும், சீனாவுக்கும் இடையே விளாடிவோஸ்டோக் அருகே உள்ள எல்லை வழியாக சீனாவுக்கு சமீபத்தில் ஏராளமானோர் சென்றனர். அவர்களில் 59 சீனர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த எல்லையை ரஷியாவும், சீனாவும் மூடி உள்ளன. இனிமேல், ரஷிய விமானங்களில் விளாடிவோஸ்டோக் பகுதிக்கு வந்திறங்கும் சீனர்கள், 14 நாட்கள் தனிமை முகாம்களில் அடைக்கப்படுவார்கள் என்றும், சிறப்பு பாஸ் பெற்றுள்ள சீனர்கள் மட்டுமே விளாடிவோஸ்டோக் பகுதியில் நடமாட முடியும் என்றும் சீன தூதரகம் கூறியுள்ளது.