கொழும்பு மாநகர சபையால் மக்களுக்கு நன்கொடை

217 0

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும்; பொது நன்கொடை பணத்தை, நாளை (08)முதல் வீடுகளுக்குச் சென்று வழங்கும் வேலைத்திட்டத்தை மாநகர சபை ஆரம்பித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலவரத்தைக் கருத்திற்கொண்டு, நாளை (08)  முதல் மூன்று தினங்கள் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்ககப்படுகிறது.

இதற்கமைய,  கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் சுமார் 12,970 குடும்பங்களுக்கு  இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது.