ஊரடங்கு அமுல்படுத்தபட்ட வேளை சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது

220 0

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில் பொகவந்தலாவ லொய்னோன் தோட்டபகுதியில் ஆறு ஒன்றில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளதோடு மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் பொகவந்தலாவ பொலிஸாரினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்