கொரோனா சந்தேகத்தில் மந்திகைக்கு கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழப்பு!

207 0

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மந்திகை வைத்தியசாலைக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

அவர் வீசிங் நோயாளி என்பதுடன் கடந்த மூன்று நாட்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டநிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.