ஆராதனைகளில் ஈடுபட்ட அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

311 0

தங்கொட்டுவ- மோருக்குள்ளி பிரதேச தேவாலயம் ஒன்றில் ஆராதனைகளில் கலந்துகொண்ட அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஒன்று கூடலைத் தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பிரதேச தேவாலயம் ஒன்றில் ஆராதனைகள் இடம்பெறுவதாக தங்கொட்டுவ பொது சுகாதார பரிதோகர்களுக்கு தகவல்கள் கிடைத்ததாகவும், அதற்கமைய, குறித்த இடத்துக்கு பொது சுகாதார பரிசோதகர்களுடன் தங்கொட்டுவ பொலிஸாரும் சென்ற போது, அங்கு எவ்வித பாதுகாப்பு நடைமுறைகளுமின்றி ஆராதனைகள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதில் கலந்துகொண்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டு, கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.