போலியான செய்திகளை நம்பவேண்டாம்!

230 0

எனது பெயரில் போலியான செய்திகள் பலரவுவதை நம்ப வேண்டாம் எனவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இணையதளங்கள் ; ஜனாதிபதி ஊடகப்பிரிவு, ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகாரம் பெற்ற முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் கணக்கினூடாக அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் நிலைமையில் நாட்டில் போலியான செய்திகள் பல பரவிவருகின்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இதை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதானது,

நாட்டின் நிலவும் தற்போதைய அவரசகால நிலையில் எனது கருத்தாக கூறப்படும் பல போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. பல்வேறுபட்ட இணையதளங்கள், தொலைபேசி தளங்கள் மற்றும் சமூக ; ஊடக ஊடகங்களில் மூலமாக இவை பரப்பப்பட்டு வருகின்றன, ஆனால் என்னால் அறிவிக்கப்படும் விசேட அறிவித்தல்கள் அல்லது செய்திகள் என்பன நாட்டின் அதிகாரபூர்வ இணையதளங்கள் ஜனாதிபதி ஊடகப்பிரிவு, ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகாரம் பெற்ற முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் கணக்கினூடாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்