கனிய வள அகழ்வு அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் காலம் நீடிப்பு!

204 0

அனைத்து கனிய வள அகழ்வு அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பத்திரங்களின் காலாவதியாகும் காலம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த பணியகத்தினால் வழங்கப்படும் மணல், மண், கற்கள் ஆகியவற்றை அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.