கொரோனா தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத பானம் தயாரிப்பு!

207 0

கொரோனா போன்ற வைரஸ் தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத பானம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவ சபையின் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறவும் விஷங்களை முறியடிக்கும் ஆற்றல் கொண்டதுமான ஆயுர்வேத மருந்துகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கவும் கொரோனா போன்ற வைரஸ் தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்குமான ஆயுர்வேத பானம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.