போருக்குப் பின்னர் முல்லைத்தீவில் முளைத்துள்ள 9 விகாரைகள்

455 0

vihara-400-seithyமுல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்கு முன்னர் எந்த பௌத்த விகாரையும் இருந்திருக்காத நிலையில் தற்போது, 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். மாவட்டத்திலுள்ள அரச காணிகள் மற்றும் அடாத்தாகப் பிடித்துள்ள தனியார் காணிகளிலேயே இந்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாங்குளம், வட்டுவாகல், ஒட்டுசுட்டான், கொக்கிளாய், மண்ணாகண்டல், சமளம்குளம், புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் மற்றும் கோப்பாபுலவு ஆகிய இடங்களில் இந்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மாங்குளம் மற்றும் கோப்பாபுலவு விகாரைகள் பெரிய விகாரைகள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a comment