வடக்கு எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரிக்கை – டக்ளஸ் தேவானந்தா

323 0

வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை பதவி நீக்கம் செய்து, அப் பதவியை மற்றொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்த கடிதத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், அதில் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் தவநாதனுக்கு அப்பதவியை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.