உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களிடம் சென்று விழிப்புணர்வு செயற்பாட்டில் தன்னார்வமாக ஈடுபட முன்வந்த தமிழ் இளைஞர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையிலான மருத்துவர்கள் விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் பெரும் அவலத்தையும் நெருக்கடி நிலையையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கையிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், தமிழ் மக்களுக்கு அது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் உன்னத நோக்கத்திற்காக ஒன்று சேர்ந்த தமிழ் இளைஞர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

