பழைய பாராளுமன்றம் எனப்படும் தற்போதைய ஜனாதிபதி செயலகத்தை எதிர்வரும் 15 திகதியில் இருந்து ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பார்வையிட வருவோர் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) என்று குறிப்பிட்டு 011-2441685 என்ற தொலைநகல் இலக்கத்தை தொடர்புக்கொண்டு அல்லது 011-2354354 என்ற இலக்கத்தை அழைத்து இதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.
பழைய பாராளுமன்றம் இலங்கை அரசியலில் முக்கியதுவமிக்க இடமாக கருதப்படுகின்றது.
இந்த கட்டடம் ஐந்து பழமையான கட்டடக்கலை பாணிகளில் ஒன்றான ´அயோனியன் முறைமைக்கமைய 82 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.
இதனை வெளியில் இருந்து அவதானிக்கும் போது ஏதென்ஸின் அக்ரோபோலிஸில் என்ற கிரேக்க தெய்வமான ´அதீனா´ வுக்காக கட்டப்பட்ட பிரதான மண்டபமாக தென்படும்.
இதனை 1930 ஆண்டு ஜனவரி 29, திகதி ஆளுநர் சேர் ஹெர்பர்ட் ஸ்டான்லியால் என்பவர் சட்டமன்றமாக நிறுவினார்.
அரசியலமைப்பின் சீர்திருத்தங்கள் மற்றும் சட்டமன்றத்தில் அடுத்தடுத்த திருத்தங்களுடன், இது மாநில பேரவையாகவும் (1931-1947), பிரதிநிதிகள் சபையாகவும் (1947-1972), தேசிய மாநில பேரவையாகவும் (1972-1978) மற்றும் இலங்கை பாராளுமன்றமாகவும் (1978-1982) கருதப்பட்டது.
அதன் பின்னர் பாராளுமன்றம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து அதாவது 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

