ஹவாயில் இருந்து அமெரிக்கா வந்த கப்பலில் பயணித்த 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
சீனாவில் தோன்றி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 97 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நாடுகளில் இதுவரை 1,02,180 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்டு இருப்பதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, 3,484 பேர் பலியாகி இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளது.