ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளருக்கு பிடியாணை!

261 0

அரசியல் பழிவாங்கல் குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் செயலாளரை கைதுசெய்ய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்றைய தினம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அலி ரொஷான் உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து சாட்சியமளிக்க அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனினும் இந்த நீதிமன்ற உத்தரவினை புறக்கணித்த காரணத்திற்காக அவருக்கு எதிராக கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.