தேசிய மொழிக் கொள்கையை அரசாங்கத்தில் உள்ள சிலர் எதிர்க்கின்றனர்!

296 0

mano-ganesan-12-e1422437623388தேசிய மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஆளுங்கட்சியில் உள்ள சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்  என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், தேசிய மொழிக் கொள்கைகளை அமுல்படுத்துவதன்மூலம் நாட்டின் இனப்பிரச்சனைக்கான தீர்வினை எட்டமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன், எனினும் சில தரப்பினர் மொழிப் பிரச்சனையைக் கூட தீர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.