தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, மத்துகம் ஆரம்ப பாடசாலை அதிபரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
9 மாணவர்களை முதலாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கோரி பிரதியமைச்சர் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் பாடசாலையின் அதிபரை அவர் தாக்கியுள்ளார்
இதனையடுத்து அதிபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவர், பலாத்காரமாக குறித்த 9 மாணவர்களின் பெயர்களையும் பாடசாலை வகுப்பு பதிவேட்டில் பதித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தற்கொலைக்கு முயன்றநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதியமைச்சருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கொழும்பின் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

