பிரதியமைச்சர் அதிபரை தாக்கினார் – ஆசிரியர் தொழிற்சங்கம் முறைப்பாடு

4510 0

ceylon-teachers-union-290x160தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, மத்துகம் ஆரம்ப பாடசாலை அதிபரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
9 மாணவர்களை முதலாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கோரி பிரதியமைச்சர் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் பாடசாலையின் அதிபரை அவர் தாக்கியுள்ளார்
இதனையடுத்து அதிபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவர், பலாத்காரமாக குறித்த 9 மாணவர்களின் பெயர்களையும் பாடசாலை வகுப்பு பதிவேட்டில் பதித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தற்கொலைக்கு முயன்றநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதியமைச்சருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கொழும்பின் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

Leave a comment