மிதிவண்டியில் சென்ற நபர் படுகொலை

286 0

கட்டுநாயக்க, ஹீனடியன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மிதிவண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவர் மற்றுமொரு நபரொருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

72 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் மினுவங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காயங்களுக்கு உள்ளான நிலையில் காணப்பட்ட சந்தேகநபர் மினுவங்கொடை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.