நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி – டாஸ் வென்று இந்தியா பவுலிங் தேர்வு

332 0

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதற்கான இந்திய அணி விபரம்:-

மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளன்டெல், ராஸ் டெய்லர், சாப்மன், டாம் லாதம் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், கைல் ஜாமிசன், ஹாமிஷ் பென்னட், டிம் சவுதி.