கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில்- விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம்

295 0

கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்ட விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கா‌‌ஷ்மீரில், திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்ட 7 இடங்களை ஜம்மு-கா‌‌ஷ்மீர் அரசு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து தேவஸ்தான குழுவினர் அங்கு சென்று கோவில் கட்ட ஏதுவான 4 இடங்களை தேர்வு செய்தனர். இறுதிக்கட்டமாக நாங்கள் அங்கு சென்று ஆய்வு செய்கிறோம். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். கா‌‌ஷ்மீரில் விரைவில் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.