மஹிந்த எதிர்பார்க்கும் அபிவிருத்தி என்ன? – சஜித் விளக்குகிறார்.

703 0

r54-720x480நாட்டின் வீடற்ற சகல பிரஜைகளுக்கும், 2025ஆம் ஆண்டுக்குள் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்று, வீடமைப்பு துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கண்டி அஞ்சலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எந்தவித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படுவதில்லை என்று
மஹிந்த அணியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

எனினும் அவர்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகள் நாட்டில் மேற்கொள்ளப்படுவதில்லை.

நல்லாட்சி அரசாங்கம் பிரதமரை வளப்படுத்திக் கொள்ளவோ, ஜனாதிபதி தமது பைகளை நிரப்பிக் கொள்ளவோ, அமைச்சரவை கொள்ளையிடவோ இடமளிக்காது.

எனினும் இவையே மகிந்த அணியினரின் எதிர்பார்க்கும் அபிவிருத்தி என்றும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கான வளமான நாடொன்றையே உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment