மாத்தறை வெலேகொடயில் இராட்சத முதலை(காணொளி)

371 0

crockdiail-matara-wearaduwaமாத்தறை வெலேகொட பகுதிக்குள் இன்று அதிகாலை இராட்சத முதலையொன்று வந்துள்ளது.

நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ளதை அடுத்தே இந்த முதலை ஊருக்குள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 18 அடி நீளமான இந்த முதலையானது, இலங்கையில் பிடிக்கப்பட்ட மிக பெரிய முதலை என வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முதலை சுமார் ஒரு டொன் நிறையை கொண்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், இந்த முதலைக்கு மூன்று கால்கள் காணப்படுவதாகவும், இது பிறக்கும் போதே மூன்று கால்களை கொண்டு பிறந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட முதலை வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் மீண்டும் நில்வள கங்கைக்குள் விடப்பட்டுள்ளது.