வெள்ளைவேன் சந்தேக நபர்களுக்கு மரண அச்சுறுத்தல்

281 0

சர்ச்சைக்குரிய வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் உண்மையை வெளியிட வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மரண அச்சுறுத்தல் விடுப்பதாக வெள்ளை வேன் ஓட்டுனர்களாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட இருவரும் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் இன்று (27) இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.