இ.போ.ச. முறைகேடுகளை ஆராய குழு நியமனம்

281 0

இலங்கை போக்குவரத்து சபையின்  கீழுள்ள டிப்போக்களில் இடம்பெறும் பல்வேறு முறைக்கேடுகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவுக்கு, அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியதற்கு அமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தாக,  அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், குறித்த குழுவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக, போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் திலக்கரத்ன பண்டார நியமிக்கப்படவுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.