தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் 2017-ம் ஆண்டு நடந்த பேரணி, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, இதில் பங்கேற்ற முதல் துணை ஜனாதிபதி என்ற கவுரவத்தை வரலாற்றின் பக்கங்களில் பெற்றார்.
47-வது ஆண்டாக நடந்த இந்த ஆண்டின் பேரணி, பொதுக்கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘நாம் ஒரு எளிய காரணத்துக்காக இங்கே கூடி இருக்கிறோம். இந்த உலகில் பிறந்த மற்றும் பிறக்காத ஒவ்வொரு குழந்தைக்கும் கடவுளால் கொடுக்கப்பட்ட திறனை பூர்த்தி செய்வதற்காக கூடி உள்ளோம். பிறக்காத குழந்தைகளுக்கு இதுவரை வெள்ளை மாளிகையில் ஒரு பாதுகாவலர் இருந்தது இல்லை’’ என கூறினார்.
இந்த பேரணி, பொதுக்கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டது அதில் பங்கேற்றவர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற கவுரவத்தை டிரம்ப் பெற்று இருக்கிறார்.