கொள்ளையுடன் தொடர்பில்லை – இலங்கையர் மறுப்பு

225 0

rejected_ciடுபாயில் கொள்ளைக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் தம்மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருந்தது.

டுபாயின் அல் முஹாஸ்னாவில் உள்ள மாளிகை ஒன்றை உடைத்த பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் கொள்ளையிட்டதாக 3 இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அவர்களில் இருவர் இலங்கைக்கு தப்பி வந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் அவர், தம்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.