எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!

205 0
தற்போதைய அரசாங்கம் நாட்டின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மின்சார சபை இலாபத்துடன் இயங்கக்கூடியதாக அபிவிருத்தி செய்யப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் தெரிவித்தார்.