கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை

218 0
மஹரமக, நாவின்ன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (21) இரவு இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

64 வயதுடைய நபர் ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.