வடபகுதியில் இதுவரை 21 ஆயிரம் அபாயகர வெடிபொருட்கள் அகற்றல்!

258 0

வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபடும் ஸார்ப்.நிறுவனமானது இதுவரை 969,670 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 21,173 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக அந்த நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கெப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2020 ஜனவரி ;மாதம்; 21 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் ஒன்பது இலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து அறுநூற்று எழுபது சதுரமீற்றர் பரப்பளவில் (969,670sqm) இருந்து இருபத்தொராயிரத்து நூற்று எழுபத்து மூன்று(21,173) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கெப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.