ஆவா குழு தொடர்பில் ராஜித மீண்டும் குற்றச்சாட்டு

263 0

rajithaஆவா எனப்படும் ஆயுத குழுவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே உருவாக்கியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்

நேற்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இராணுவத்தை சேர்ந்த ஒரு அதிகாரி மீது குற்றம் சுமத்துவதன் மூலம் முழு இராணுவமும் குற்றவாளி ஆவதில்லை என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ராஜபக்ஷ தரப்பினரே இராணுவத்தை குற்றவாளிகளாக சித்தரித்துள்ளனர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் செயற்படும் ஆவா குழு மக்களிடம் இருந்து கப்பம் பெறும் நோக்கில் செயற்படும் குழு ஒன்று மாத்திரமே என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.