கோடி ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஐவர் கைது!

227 0

சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் சிகரெட்டுக்களை கொண்டு வர முற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.