மன்னார் மாவட்டச் செயலகத்தில் உழவர் திருநாள்!

246 0

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உழவர் விழாவும், உழவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது காலை 7 மணியளவில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு அகிய 5 பிரதேச செயலாளர் பிரிவகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 12 உழவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக அதிகாரிகள் கலந்துகொண்டதுடன் கௌரவிப்பு நிகழ்வைத் தொடர்ந்து உழவர் விழா நிகழ்வுகள் இடம்பெற்றது.