சோவை ஆளாக்கி எதிர்ப்பாளர்கள் இரண்டு பேர் ஒன்று பக்தவச்சலம் மற்றொன்று கருணாநிதி என்று ரஜினிகாந்த் பேசினார்.
துக்ளக்கின் 50-வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு, ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அதில் ரஜினிகாந்த். பேசினார்.
“ஒருவர் எல்லா துறையிலும் பிரபலமாவதற்கு காரணமாக இருப்பது அவரது எதிரிகள், எதிர்த்தவர்களாலேயே அவர்கள் பெரியாளாவார்கள். சில நேரங்களில் சில சூழ்நிலைகள் உருவாகும். அதை எப்படி கையாளுகிறார்கள் என்பது முக்கியம். சோ-வை பெரியாளாக்கியது ரெண்டுபேர், எதிர்த்தவர்கள் ரெண்டுபேர் ஒன்று பக்தவச்சலம் மற்றொன்று கலைஞர்.
அப்போது பக்தவச்சலம் முதல்வர். சோ அப்போது சாதாரண நடிகர். வக்கீல், சிறு சிறு நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறார். அவர் சம்பவாமி யுகே யுகே என்று நாடகம் போட்டார். அதில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருப்பார். அதற்கு அவர் நிறுத்தணும் என்று வழக்கு போட்டார் பக்தவச்சலம். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடி வென்றார். சாதாரண சோ-வை அன்று பெரிய ஆளாக்கியது அப்போது பக்தவச்சலம். 1971-ல் பெரியார் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் சென்றார்.
அதை யாரும் பத்திரிக்கையில் போடவில்லை. சோ அதை அட்டைப்படத்தில் போட்டு கடுமையாக கண்டித்தார். அப்போது முதல்வர் கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. அதன்பின்னர் பத்திரிக்கையை சீஸ் செய்தார்கள், அதற்கு அடுத்த வாரம் மீண்டும் அச்சடித்து கருப்புக்கலரில் அட்டை வெளியிட்டார் சோ. அந்த பத்திரிகை அதிக அளவில் விற்றது.
அதன்மூலம் பத்திரிகை உலகில் பிரபலமானார் சோ அதை செய்தவர் கருணாநிதி. அதற்கு அடுத்த இதழில் தங்கள் பத்திரிகையின் பப்ளிசிட்டி மேனேஜர் என்று கலைஞர் படத்தை பெரிதாக போட்டார் சோ.
இன்னொரு சம்பவம் தமிழ்நாட்டுக்கு மட்டும் தெரிந்த சோ-வை அகில இந்திய அளவில் பிரபலமாக்கியது இந்திரா. 1975-ம் ஆண்டு மிசா இந்தியா முழுதும் அமலானது. அப்போது சோ தனது பத்திரிக்கை மூலம் மிகக்கடுமையாக போராடினார். அவருக்கு எதிரான அடக்குமுறைகளால் அகில இந்திய தலைவர்களுடன் சோ-வை கொண்டுச் சேர்த்தது. அதில் வாஜ்பாய், அத்வானி, சந்திரசேகர், ராமகிருஷ்ண ஹெக்டே என பெரிய தலைவர்களிடம் நெருக்கமாக்கியது. அதற்கு வழி வகுத்தவர் இந்திரா காந்தி.
கவலைகள் வரும் அதை நிரந்தரமாக்கிக்கொண்டால் நீ நோயாளி. தற்காலிகமாக்கிவிட்டால் அறிவாளி. சோ அந்த அறிவாளி. அவர் கவலைகளை தற்காலிகமாக்கிக்கொண்டார். இப்ப சோ போன்ற பத்திரிகையாளர் மிக மிக அவசியம்”.
இவ்வாறு ரஜினி பேசினார்.

