அடக்குமுறைகளின் மூலம் புதிய கட்சியின் பயணத்தை தடுக்க முடியாது – பெசில்

544 0

basil-450x318அடக்குமுறைகளின் மூலம் புதிய கட்சியின் பயணத்தை தடுக்க முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய கட்சிக்கு ஆட்களை சேர்க்கும் போது முதலில் கட்சியில் இணைந்து கொள்வோர் பட்டியலில் தாம் முன்னணி வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் சுந்திரக் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்சியில் இணைந்து கொள்ளும் உறுப்பினர்கள் முன்னைய கட்சிகளது உறுப்புரிமை ரத்து செய்தல் மற்றும் ஏனைய அடக்குமுறைகளின் ஊடாக புதிய கட்சியின் பயணத்தை நிறுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.