துப்பாக்கி சூட்டுக்கு பலியான மாணவர்களுக்கு நட்டஈடு – சம்பந்தன்

292 0

31031அண்மையில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டை அடுத்து பலியான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பலியான பல்கலைக்கழக மாணவன் சுலக்ஷனின் வீட்டுக்கு இன்று எதிர்கட்சி தலைவர் சென்றிருந்தார்.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் சென்றிருந்தார்.

இதன்போது அந்த குடும்பங்களில் நலன்களை விசாரித்த அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரும் கலந்துரையாடி, மாணவர்களுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொக்க நடடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ஒருபுறம் இடம்பெற்று சென்றாலும், அவர்களுக்கான நட்டஈட்டை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் குறிப்பிட்டார்.