புகையிரத்துடன் மோதியதில் நபர் ஒருவர் பலி

247 0
யாழ்ப்பாணத்தில் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (05) இரவு வவுனியா, தோக்கவத்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வவுனியா, குமன்குளம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய சுப்ரமணியம் நாகராஜ எனும் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.