திமுக இளைஞரணி நடத்தும் ‘டிசிஎல்’ கிரிக்கெட் போட்டி: தமிழகம் முழுதும் அணிகள் பங்கேற்பு

212 0

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிபோல் இளைஞர்களை திரட்டும் டிபிஎல் கிரிக்கெட் போட்டியை திமுக இளைஞரணி நடத்த உள்ளது. இதன் இறுதிப்போட்டி சென்னையில் நடக்கிறது. ஸ்டாலின் வெற்றிப்பெற்ற அணிக்கு பரிசு வழங்குகிறார்.

தமிழகத்தில் கிரிக்கெட் போட்டிகள் மீது இளைஞர்களுக்கு தனி மவுசு உண்டு. இந்திய அளவில் கிரிக்கெட் போட்டிக்கு இருக்கும் வரவேற்பை அடுத்து தனியார்கள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறது. 20 ஓவர் போட்டியான இதன்மூலம் பல திறமையான வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர்.

இதேப்போன்று தமிழக அளவில் டிபிஎல் போட்டிகளும் நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வாகின்றனர். கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு தனி என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். பல இளைஞர்கள் இணைந்து கிரிக்கெட் குழுக்கள் அமைத்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.