சர்வதேச மட்டத்திலும் கூட்டமைப்பின் பலத்தை உறுதிப்படுத்துக!

234 0

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அதிகரிப்பதன் ஊடாக உள்நாட்டிலும் , சர்வதேச மட்டத்திலும் கூட்டமைப்பின் பலத்தை உறுதிப்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அனைவரும் ஒற்றுமையுடன் ஓரணியில் பயணிக்க வேண்டும். எமக்குள் கருத்து முரண்பாடுகள் இருந்தால் அது தொடர்பில் பேசித் தீர்க்கலாம். அதைவிடுத்து , தொடர்ந்தும் முரண்பாடுகளை வளர்ப்பது அர்த்தமற்றது.

தமிழ் மக்கள் தொடர்ந்து எங்கள் தலைமையின் கீழ் ஒன்றாக நிற்கின்றார்கள்; ஒரே கொள்கையுடன் நிற்கின்றார்கள் என்பதை விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் உறுதிப்படுத்த வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை நாம் பெற்றுவதற்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியை நாடி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்;.