மன்னிப்புக் கேட்டார் பாப்­ப­ரசர் பிரான்சிஸ்

285 0

புது­வ­ருட தினத்­தை­யொட்டி வத்­திக்­கானின் சென் பீற்றர்ஸ் சதுக்­கத்தில் நல்­வாழ்த்­து­க்களைத் தெரி­வித்த போது கரத்தை பல­வந்­த­மாக பிடித்து இழுத்த பெண்ணின் கரத்தை அடித்தமைக்கு பாப்­ப­ரசர் பிரான்சிஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பாப்­ப­ரசர் பிரான்சிஸ் புது­வ­ருட தினத்­தை­யொட்டி  வத்­திக்­கானின் சென் பீற்றர்ஸ் சதுக்­கத்தில் கூடி­யி­ருந்த கூட்­டத்­தி­ன­ருக்கு நல்­வாழ்த்­து­க்களைத் தெரி­வித்த வண்ணம் சென்றபோது கூட்­டத்­தி­லி­ருந்த பெண்­ணொ­ருவர் தன்னைக் கடந்து சென்ற பாப்­ப­ர­சரின் கரத்தை ஆர்வம் மிகு­தியால் பற்றி தன் பக்கம் இழுத்­துள்ளார்.

இதன்­போது அந்தப் பெண்ணின் பிடி­யி­லி­ருந்து தனது கரத்தை பல­வந்­த­மாக  விடு­விக்கப் போரா­டிய  பாப்­ப­ரசர் அது முடி­யாமல் போகவும்  சின­ம­டைந்த நிலையில் அந்தப் பெண்ணின் கரத்தை தனது கரத்தால் அடித்து தட்டி விட்டு தனது கரத்தை விடு­வித்­துள்ளார்.

கரம் விடு­விக்­கப்­பட்ட நிலை­யிலும் பாப்­ப­ரசர் கோபம் தணி­யாது இருப்­பது அந்நிகழ்வில் படமாக்கப்பட்ட காணொளி நேற்றைய முன்தினம் (31.12.2019) வைரலானது.

இந்நிலையில்,புத்தாண்டு தினத்தில் வத்­திக்­கானின் சென் பீற்றர்ஸ் சதுக்­கத்தில் உரையாற்றியபோது, பாப்­ப­ரசர் பிரான்சிஸ்  “ நாம் பல முறை பொறுமையை இழக்கிறோம். இது எனக்கும் நடக்கிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த மோசமான செயலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் “,என்று அவர் தெரிவித்துள்ளார்.