பணமதிப்பிழப்பு நடவடிக்கை; சசிகலா செயல்பாடு பற்றி வருமான வரித்துறை தகவல்: கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

236 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் சிக்கிக் கொண்ட பல ஆயிரம் கோடி ரூபாயில் ஒருபகுதி வருமான வரித்துறையிடம் இன்றைக்கு சிக்கியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎ.ஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 22 செப்டம்பர் 2016 -ல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 8 நவம்பர் 2016 -ல் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை பாஜக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த காலக்கட்டங்களில் கணக்கில் காட்டப்படாத ஏறத்தாழ இரண்டாயிரம் கோடி ரூபாயை புதிய நோட்டுகளாக மாற்றுவதற்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா எடுத்துக் கொண்ட முயற்சிகள் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளன.