சம்பிக்கவின் சாரதியை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

198 0

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவரை எதிர் வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் வெலிக்கடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் தொடர்பிலேயே அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான நிலையிலேயே நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் போது உண்மைகளை, சாட்சிகளை மறைத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ்  கடந்த 18 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இன்று பிணையில் செல்ல முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்கவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.