பிரான்சில் சிறப்படைந்த சுவாசி லு றூவா தமிழ்ச்சோலைப் பள்ளியின் 10 ஆவது ஆண்டு நிறைவுவிழா!

629 0

பிரான்சு சுவாசி லு றூவா தமிழ்ச்சங்கம் – தமிழ்ச்சோலைப் பள்ளியின் 10 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 14.12.2019 சனிக்கிழமை இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து ஆசிரியர் மதிப்பளிப்பு, மாணவர்கள் மதிப்பளிப்பு போன்ற நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. சுவாசி லு றூவா மாநகர சபையின் சார்பிலும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன் மதிப்பளிப்பினையும் வழங்கியிருந்தனர்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் சார்பில் கலந்துகொண்ட முக்கிய செயற்பாட்டாளர் திரு. அகிலன் அவர்கள் சிறப்புரையாற்றியதுடன் ஆசிரியர்களையும் மாணவர்களையும் மதிப்பளிப்புச் செய்திருந்தார்.

தொடர்ந்து ஏனைய பிரமுகர்களும் வெற்றிபெற்ற மாணவர்களை மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.
தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)