அனர்த்த அபாயக் குறைப்பு கலந்துரையாடல் மட்டக்களப்பில்(காணொளி)

392 0

batti-meettingமண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனர்த்தம் அபாய குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கொத்தியாபுலை, இலுப்படிச்சேனை , மகிழவட்டுவான் , நரிப்புல்தோட்டம் , ஈச்சந்தீவு ஆகிய கிராம சேவை பிரிவிகளில் பாம் புவுன்டேசன் நிறுவனத்தின் அனுசரணையில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற அனர்த்தம் அபாய குறைத்தல் தொடர்பான  மூன்று ஆண்டு செயல் திட்டம் தொடர்பாக கலந்துரையாடல், பாம் புவுன்டேசன்  நிறுவன  திட்ட முகாமையாளர் அருளானந்தம் சக்தி  ஒழுங்கமைப்பில் மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எஸ்.ராஜ்பாபு தலைமையில் இன்று மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .

இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மூன்றாண்டுகளின் அனர்த்தம் அபாய குறைத்தல் செயல் திட்டம், பங்குதாரர்களுடனான  திட்டத்தின் நடைமுறைப்படுத்தல்,  திட்டத்திற்கான அதிகாரிகளின் வலுவூட்டல் போன்ற திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலாக இந்நிகழ்வு இடம்பெற்றது.